புதன், 12 செப்டம்பர், 2012

நாமும் நம் மொழியும்'


குறிப்பு. இனி இப்பகுதி தமிழில் அமையும். இனி தொடர்ந்து எழுதுவேன்.

 மதுரையில் அண்மையில் திருச்சிராப்பள்ளி அல்லூர்  திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர் இரா.இளங்குமரனார் அவர்கள் 'நாமும் நம் மொழியும்' குறித்து பேசும் போது கீழ்க்கண்டவற்றை பின்பற்றும்படி கூறினார்கள்.
  1. அனைவரும் நம் பெயரின் முதல் எழுத்தை தமிழில் தான் சொல்ல வேண்டும். ( நான் எப்போதும் என் இனிஷியலை தமிழில் மு.வீராசாமி என்று தான் சொல்லுவேன்)
  2. கன்னடர்களைப்போல், மலையாளிகளைப்போல், முடிந்தவரை நாம் ஒருவருக்கு ஒருவர் பேசும்போது த்மிழிலேயே பேசுவோம் என்றும், ஓரிரு சொல் கலப்பாக இருந்தால் பரவாயில்லை என்றும், நாளடைவில் சரியாகிவிடும் என்றும் கூறினார்.
  3. கடிதம் ஒரு ஆவணம் என்றும இனி அனைவரும் கடிதம் எழுத வேண்டும் என்றும் குறிப்பாக முக்கியமா பெரிவர்களுக்கு எழுத வேண்டும் என்றார்.
  4. அவர்களின் பதில் கடிதத்தை பத்திரப்படுத்தவேண்டும் என்றும் அது பிற்காலத்தில் ஆவணமாக பயன்படும் என்றும் கூறினார்.
  5. நம் வீட்டில் சமயலறை, படுக்கை அறை இருப்பது போல சிற்ய நூலகம் ஒன்று இருக்க வேண்டும் என்றும் குழந்தைகளிடையே படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
  6. நம் மொழியை நாம் தானே வளர்க்க வேண்டும். . .

சிந்திப்போம்....

1 கருத்து: